Wednesday, October 27, 2010
பெண்களும் இடஒதுக்கீடுகளும்...
காங்கிரஸ் கட்சியின் பதவிகளில் பெண்களுக்கு 33 சதவிகித இடஒதுக்கீடு அளிக்கப்படும் என்று அக்கட்சியின் தலைவர் சோனியா காந்தி அறிவித்துள்ளார். நாடளுமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவிகித இடஒதுக்கீட்டை பெற்றுத்தர எவ்வளவோ முயன்றும் முடியாமல் போகவே இந்த முடிவை எடுத்திருப்பார் போலும், கிடப்பில் போடப்பட்டுள்ள இந்த மசோதாவை தூசு தட்டி நிறைவேற்றினால் இன்னும் நன்றாக இருக்கும்.
கடந்த உள்ளாட்சித் தேர்தல்களில் பெண்களுக்கு 33 சதவிகித இடம் வழங்கப்பட்டது. அதன் மூலம் சுமார் 10 லட்சம் பெண்கள் உள்ளாட்சி அமைப்பில் பிரதிநிதித்துவம் பெற்றார்கள், இதுவே ஒரு உலக சாதனைதான், ஆனாலும் இதில் வருத்தம் என்னவென்றால் வெற்றி பெற்ற பெண்களில் சுமார் 90 சதவிகிதம் பேர் தங்களின் ஜனநாயகக் கடமையை ஆற்றுவதில்லை என்பதுதான். வெற்றி பெற்ற பெண்களின் கணவர்களோ அல்லது மகன்களோதான் மக்கள் பிரதிநிதிக்குரிய அனைத்து வேலைகளையும் பார்க்கிறார்கள். இந்த நிலை மாறவேண்டும் மாறினால்தான் இடஒதுக்கீட்டுக்கு அர்த்தம் இருக்கும் இல்லையெனில் 33 சதவிகிதம் அல்ல 66 சதவிகிதம் இடஒதுக்கீடு கொடுத்தாலும் அது வீண்தான்.
பெண்களே.... எத்தனை நாளைக்குதான் வீட்டுக் கணக்கையே போட்டுக்கிட்டு இருப்பீங்க? கொஞ்சம் நாட்டுக் கணக்கையும் போட வாங்க...
Wednesday, October 13, 2010
தீவுகளின் வாழ்க்கைப் போராட்டம்
இந்த வருஷம் வெயில் அதிகம்பா, வெயில் காலத்துல மழை பிய்ச்சு உதறுது, சென்னையில கல்மழை பெய்யுதாமே... என்று நம்மில் பலரும் பேசி இருப்போம். ஆனால் அதற்கான காரணத்தை அறிய முற்படும்போதுதான் மயக்கம் வருகிறது.
உலகின் இன்றைய மிகமுக்கியப் பிரச்சினை புவிவெப்பமயமாதல் மற்றும் பருவநிலை மாற்றம். ஆனால் நம்மில் பலருக்கும் அதைப்பற்றிய அக்கறை சுத்தமாக கிடையாது. அட நம்மலால எப்படிப்பா பூமி வெப்பமாகும் என்று அங்கலாய்ப்பவர்களுக்கு சில கேள்விகள்.
1. பிளாஸ்டிக் குப்பைகளை மற்ற குப்பைகளிலிருந்து பிரித்து வைத்திருக்கிறீர்களா?
2. டயர், பிளாஸ்டிக், மைக்கா போன்றவற்றை எரிக்காமல் இருந்திருக்கிறீர்களா?
3. பெட்ரோல் வாகனங்களை (கார், பைக்) ஓட்டாமல் இருந்திருக்கிறீர்களா?
தவாருவா தீவு |
பெர்முடா தீவு |
போர்டோ ரிக்கோ |
உலகமே பாதிக்கப்படும் போது வளர்ந்த நாடு, வளரும் நாடு, குட்டித் தீவுகள் என்ற பாரபட்சம் எதற்கு? எல்லோரும் சேர்ந்து செயல்படவேண்டியதுதானே என்று அளவுக்கு அதிகமான போதையில் இருந்தபோது என்னுடைய சிறுமூளையில் தோன்றியது. ஆனால் மயக்கம் தெளிந்த பிறகே உண்மை புரிந்தது. புவிவெப்பமயமாதலின் விளைவாக நாடுகளுக்கிடையே ஏற்படும் உடன்பாடுகளால் அதிகப்படியான நிதிச்சுமை ஏழை நாடுகளுக்கு மட்டுமே! நிதிச்சுமையைத் தாங்கக்கூடிய சக்தி மற்ற ஏழை நாடுகளுக்கு உண்டா என்றால் நிச்சயமாக இல்லை என்பதுதான் பதில். புவிவெப்பமயமாதலைத் தடுக்கும் விதமாக பல உபகரணங்கள் (சோலார் விளக்குகள், சோலார் ரிக்ஷா) இப்போது சந்தையில் இருக்கின்றன. இவையனைத்தும் யார் மொத்தமாகத் தயாரிக்க முடியும்? எடுத்துக்காட்டாக வளர்ந்த நாடுகள் தங்களுடைய தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக இந்த உபகரணங்களை மிகவும் குறைந்த விலையில் தயாரிக்கும், அதே பொருளைத் தயாரிக்க பின்தங்கிய நாடுகள் பத்து மடங்குக்கும் அதிகமாக செலவு செய்ய வேண்டிவரும். இந்தச் சூழ்நிலையில் வளரும் நாடுகள் அந்த உபகரணங்களை மொத்தமாக உற்பத்தி செய்கின்ற நாட்டிடமிருந்து வாங்கும்போது இலாபம் யாருக்கு?
வளர்ந்த நாடுகளில் ஏற்பட்ட தொழில் புரட்சியின் பின்விளைவே இன்றைய புவிவெப்பமயமாதலும் ஓசோனில் விழுந்த ஓட்டையும். காரணமும் அவர்களே! இலாபமும் அவர்களுக்கே! தயிரிலிருந்து வெண்ணை எடுப்பவர்களை பார்த்திருப்போம், தண்ணிரிலிருந்து வெண்ணை எடுக்கும் கூட்டமும் இங்கேதான் இருக்கிறது.
தைமோர் தீவில் வாழும் பெண்கள் |
Wednesday, October 6, 2010
அப்படி எழுதுடா என் செல்லம்..
சமீபத்தில் எனது மெயிலுக்கு வந்த இந்த படங்களை பார்த்து நெடுநேரம் சிரித்துக்கொண்டே இருந்தேன்... திருவள்ளுவர் 23ம் புலிகேசி படத்திற்கு எப்போது பாடல் எழுதினார்? பையனின் எழுத்து திறமை நன்று எனினும் இவ்வளவு திறமையாக எழுதுபவன் பாடத்தை படித்துவிட்டு எழுதியிருந்தால் சிறப்பான மதிப்பெண் பெறுவானே என்ற எண்ணம் தோன்றாமலில்லை.
Subscribe to:
Posts (Atom)