Wednesday, October 27, 2010
பெண்களும் இடஒதுக்கீடுகளும்...
காங்கிரஸ் கட்சியின் பதவிகளில் பெண்களுக்கு 33 சதவிகித இடஒதுக்கீடு அளிக்கப்படும் என்று அக்கட்சியின் தலைவர் சோனியா காந்தி அறிவித்துள்ளார். நாடளுமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவிகித இடஒதுக்கீட்டை பெற்றுத்தர எவ்வளவோ முயன்றும் முடியாமல் போகவே இந்த முடிவை எடுத்திருப்பார் போலும், கிடப்பில் போடப்பட்டுள்ள இந்த மசோதாவை தூசு தட்டி நிறைவேற்றினால் இன்னும் நன்றாக இருக்கும்.
கடந்த உள்ளாட்சித் தேர்தல்களில் பெண்களுக்கு 33 சதவிகித இடம் வழங்கப்பட்டது. அதன் மூலம் சுமார் 10 லட்சம் பெண்கள் உள்ளாட்சி அமைப்பில் பிரதிநிதித்துவம் பெற்றார்கள், இதுவே ஒரு உலக சாதனைதான், ஆனாலும் இதில் வருத்தம் என்னவென்றால் வெற்றி பெற்ற பெண்களில் சுமார் 90 சதவிகிதம் பேர் தங்களின் ஜனநாயகக் கடமையை ஆற்றுவதில்லை என்பதுதான். வெற்றி பெற்ற பெண்களின் கணவர்களோ அல்லது மகன்களோதான் மக்கள் பிரதிநிதிக்குரிய அனைத்து வேலைகளையும் பார்க்கிறார்கள். இந்த நிலை மாறவேண்டும் மாறினால்தான் இடஒதுக்கீட்டுக்கு அர்த்தம் இருக்கும் இல்லையெனில் 33 சதவிகிதம் அல்ல 66 சதவிகிதம் இடஒதுக்கீடு கொடுத்தாலும் அது வீண்தான்.
பெண்களே.... எத்தனை நாளைக்குதான் வீட்டுக் கணக்கையே போட்டுக்கிட்டு இருப்பீங்க? கொஞ்சம் நாட்டுக் கணக்கையும் போட வாங்க...
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment